ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.
அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அனைத்து கட்சி அரசாங்கம் தொடர்பான யோசனைகளை முன்வைப்பதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.