Saturday, September 21, 2024
29 C
Colombo
அரசியல்ரணிலுக்கு வாக்களிக்க 15 மொட்டுக் கட்சி MPகள் 15 கோடி ரூபா பெற்றனர் - ராஜித...

ரணிலுக்கு வாக்களிக்க 15 மொட்டுக் கட்சி MPகள் 15 கோடி ரூபா பெற்றனர் – ராஜித சேனாரத்ன

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுவதற்கு அரசாங்கம் 10 – 15 கோடி ரூபாவை ஒவ்வொரு MPக்கும் வழங்கியுள்ளதாக SJB ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அண்மையில் யூடியூப் சேனலொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மொட்டு கட்சி ரணிலுக்கு வாக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில், ஒவ்வொரு நாடாளுமன்ற உருப்பினருடனும் தனித்தனியாக கலந்துரையாடியதாகவும், அவர்களுக்கான பணம், எரிந்த வீடுகளுக்கு புதிய வீடுகள், அவர்களுக்கான இழப்பீடு, வாகன அனுமதிப்பத்திரம், இரண்டரை வருட பாதுகாப்பு போன்ற விடயங்களை வழங்க இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் வலியுறுத்தினார்.

டலஸுக்கு ஆதரவளிப்பதற்காக 15 மொட்டு கட்சி உறுப்பினர்கள் தன்னுடன் கலந்துரையாடியதாகவும், அவர்களும் தன்னிடம் பணம் எதிர்பார்த்ததாகவும் அவர் கூறினார்.

குழு எதிர்பார்க்கும் பணத் தொகை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தான் தெரிவித்ததாகவும், ஐந்து சதம் கூட கொடுக்க வேண்டாம் என அவர் பதிலளித்ததாகவும் ராஜித MP குறிப்பிட்டார்.

பின்னர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்குவதாக குறித்த நபர்கள் தெரிவித்ததாகவும், அந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10-15 கோடி ரூபா கொடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles