முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருந்து விரைவில் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் பந்துல குணவர்தன இந்த தகவலை வெளியிட்டார்.
தற்பொழுது கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூரில் இருக்கின்ற போதும் அவர் அங்கு தலைமறைவாக வாழவில்லை.
உரிய வகையில் விசாவுக்கு விண்ணப்பித்து சிங்கப்பூரில் தங்கியிருக்கின்ற அவர், விரைவில் இலங்கைக்கு திரும்புவார்.
எனினும் அவர் நாடு திரும்பும் திகதி மற்றும் அவருடைய பயணத் திட்டங்கள் குறித்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்படவில்லை என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.