ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் வழி தவறிவிட்டதை தாம் ஒப்புக்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தவறான முடிவுகள், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமை மற்றும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் போன்றனவே இந்த நெருக்கடிக்கு வழிவகுத்ததாக அவர் வாராந்த தேசிய பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
‘நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்த சென்றமையே நாம் செய்த மிகப்பெரிய தவறு’ என்றார்.