ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் வெற்றிடமான தேசியப்பட்டியல் எம்.பி பதவிக்கு சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், ருவன் விஜேவர்தன அல்லது பாலித ரங்கே பண்டார ஆகியோரில் ஒருவரை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த பதவியை சாகல ரத்நாயக்க அல்லது ருவன் விஜேவர்தன பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.