நாடாளுமன்றத்துக்குள் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவானது, களத்தில் உள்ள நிலைமைக்கு முரணானது என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
போராட்டக்களத்தில் விடுக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் இன்று நாடாளுமன்றில் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தெரிவின்பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.