Monday, September 22, 2025
29 C
Colombo
அரசியல்திட்டங்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சம்பிக்க வலியுறுத்து

திட்டங்களை முன்வைக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு சம்பிக்க வலியுறுத்து

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் முன்வைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தியுள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், மக்களின் குறைகளை புரிந்து கொண்டால் வேட்புமனுக்கள் மற்றும் தேர்தல்கள் தேவைப்படாது என சுட்டிக்காட்டினார்.

அரசியல் நோக்கங்களை ஒதுக்கித் தள்ளக்கூடிய, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யக் கூடிய ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்க வேண்டும் எனவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

எவ்வாறாயினும், பல வேட்பாளர்கள் ஜனாதிபதி அதிகாரத்திற்காக போட்டியிட முன்வந்துள்ள நிலையில் அவர்கள் எதிர்காலத்திற்கான தமது திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்துக்கு வந்து, தனிப்பட்ட அரசியல் நோக்கங்களை ஒதுக்கி வைத்துவிட்டு பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேட்டுக்கொண்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles