முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை 15 நாட்களுக்குள் சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் இருந்து தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்த முன்னாள் ஜனாதிபதி, சிங்கப்பூரில் இருந்து மத்திய கிழக்கு நாடொன்றிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பாதுகாப்பு வழங்குவதில் சிங்கப்பூர் தற்போது சிக்கலை எதிர்கொண்டுள்ளதுடன், சிங்கப்பூரில் தங்கியுள்ள அவரின் அடுத்த இலக்கு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.