Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலக அனுர விதித்த நிபந்தனைகள்

ஜனாதிபதி தேர்தலிலிருந்து விலக அனுர விதித்த நிபந்தனைகள்

ஜனாதிபதிக்கான போட்டியில் இருந்து விலகுவதற்கு JVPயின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க சில நிபந்தனைகளை விதித்துள்ளார்.

காலியில் JVPயின் பிரதிநிதிகளை சந்தித்த பின்னர் ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இந்த நிபந்தனைகளை விதித்தார்.

நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அவர்கள் 2 பேரும் நீண்ட காலத்துக்கு அந்த பதவிகளை தக்க வைத்துக் கொள்ளும் ஆசை இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.

அதேநேரம் புதிதாக நியமிக்கப்படும் ஜனாதிபதியும் பிரதமரும் குறுங்காலத்தில் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கான திட்டத்தை முன்வைக்க வேண்டும்.

துரிதமாக தேர்தலொன்றை நடத்துவதற்கு இணங்க வேண்டும்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles