எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்களை நோக்கி துப்பாக்கிகளை காட்ட வேண்டாம் என பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை கேட்டுக் கொள்வதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (06) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எரிபொருள் நிலையத்தில் நபர் ஒருவரை உதைத்த இராணுவ அதிகாரி உட்பட இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்ட இராணுவ வீரர்களுக்கு வெளிப்படையான முறையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.
உரிய நடவடிக்கை எடுத்து, இராணுவத் தளபதி, இராணுவம் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் நற்பெயரைப் பாதுகாக்குமாறு இராணுவத் தளபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.
