எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் நேற்று முதல் தடவையாக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இதன் போது கருத்து வெளியிட்ட மகிந்த ராஜபக்ச தனது மீள் அரசியல் பிரவேசம் குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.