21 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு தாம் எதிரானவர் எனவும் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க உடன்படவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (04) இடம்பெற்ற ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் எரிபொருள் மற்றும் எரிவாயுவைக் கேட்டபோது, அரசாங்கம் காணி உறுதிப்பத்திரங்களை வழங்க தயாராகுவதாகவும், இது முன்னுக்குப்பின் முரணான விடயமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதேவேளைஇ எதிர்காலத்தில் முக்கியமான அரசியல் தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.