இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்ததையடுத்து, இன்று விவாதிக்கப்படவுள்ள தற்போதைய சுகாதார பிரச்சினைகள் குறித்த விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நாடாளுமன்றம் ஜூலை 4ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் கூடவுள்ளதாக தகவல் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல்வேறு காரணங்களால் நாடாளுமன்றத்தில் கேட்க முடியாத 50 கேள்விகளுக்கு முற்பகல் 10.00 மணி முதல் மாலை 3.30 மணி வரை முழு நேரமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.