ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொருவர் எம்.பி பதவியிலிருந்து விலகி அரசியலை விட்டு வெளியேறவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இருந்தாலும், தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
எவ்வாறாயினும் தற்போது பதவியில் உள்ள ராஜபக்ஷ ஒருவர் முழுமையாக அரசியலிலிருந்மு விலகிச் செல்ல தீர்மானித்துள்ளதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நாடாளுமன்றில் சமல் ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சஷிந்திர ராஜபக்ஷ ஆகியோர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.