பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கொழும்பில் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தி அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
பொருத்தமான ஒருவருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஆசனத்தை கைவிடுவதாக அவர் கூறியுள்ளார்.
இன்றுடன் அரச பணிகளை இனி நடத்தப்போவதில்லை எனவும், ஆனால் அரசியல் செயற்பாடுகள் தொடரும் எனவும் பசில் அறிவித்தார்.