கடந்த இரண்டரை வருட காலங்களில் நடந்தவற்றை நாடு மறக்கவில்லை எனவும் மக்களின் மெமரி பழுதாகவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய விசேட உரைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இடைக்கால வரவு- செலவு திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் நாட்டை மீட்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டை இலவச கணினிக்கு ஒப்பிட்ட அவர், அதனை மறுதொடக்கம் செய்து மீட்டமைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
அத்துடன், கம்பியூட்டரை ரீசெட் பண்ணும்போது மெமரி கார்ட்டை சரிபாருங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.