தேர்தல் நடாத்தும் நிலையில் நாடு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தெரிவித்த சில விடயங்கள் பின்வருமாறு:
-21ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும்.
- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்
-சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவது சாத்தியமற்றது
- தேர்தல் நடத்துவதற்கு முன்னர் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கடமை.
- கடந்த அரசாங்கம் சர்வதேச பிணை முறிகளில் முதலீடு செய்வதற்கு எடுத்த தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது
-தேவையற்ற அபிவிருத்தி திட்டங்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.