ஜப்பானுடனான உறவுகள் முறிந்துவிட்டதாகவும், அந்த உறவை சரிசெய்து அவர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க சிறிது காலம் எடுக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இவ்வருட இறுதிக்குள் இலங்கைக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.