மக்கள் கோரிக்கை விடுத்தால் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் வருவார் என டீ.பி.ஹேரத் எம்.பிதெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தார்.
எனினும், மக்கள் அவரை மீள அழைத்தனர். அவரும் வந்து, ஆட்சியை பிடித்தார்.
எனவே, மக்கள் கோரினால் அவர் மீண்டும் வருவார்.
அத்துடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு நான் ஆதரவு வழங்குகிறேன்.