நிதி அமைச்சை பொறுப்பேற்பதாக இருந்தால் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், தான் நிதியமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் அது தனது தனிப்பட்ட வெற்றியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
தான் நிதியமைச்சை ஏற்க வேண்டுமாயின் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும்.
நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க 100 சதவீதம் தயாராக இருப்பதாகவும், அதற்கான தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்துவிட்டு அரசாங்கத்தில் இணைவதை தேசிய அரசாங்கம் என்று சொல்ல முடியாது.
SLPP, SJB, TNA மற்றும் JVP போன்ற அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.