பிரபல இயக்குநரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவரின் இருதய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.