பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என ஹிருணிகா பிரேமச்சந்திர எம்.பி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் பதவி வெற்றிடத்துக்கு ஜீ.எல்.பீரிஸ் போன்ற ஒருவர் நியமிக்கப்படுவார் என அவர் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் ஸ்திரமின்மையும், ராஜபக்ஷக்களின் பாதுகாப்பின்மையும் குறையும் வரை தான் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்முறை ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற போதிலும்இ எந்தவொரு வெளிநாட்டு அரச தலைவர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.