21ஆம் திருத்தச் சட்டத்தின் வரைவு அடுத்தவாரம் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் குழு ஒன்று அமைத்து, 21 ஆம் திருத்தச் சட்ட வரைவு ஆராயப்பட்டு வருகிறது.
அடுத்தவாரம் அந்த பணிகள் நிறைவடைந்ததும், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதியுடன் அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.