ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் யோசனை சுமந்திரனால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.
இதனை நிலையியல் கட்டளை சட்டங்களை கைவிட்டு இன்று(17) விவாதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்ட போதும் அதற்கு ஆளும் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதன்படி இந்த யோசனையை இன்று சபையில் விவாதிப்பதா? இல்லையா? என வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இன்று விவாதிப்பதற்கு ஆதரவாக 68 பேரும் எதிராக பிரதமர் ரணில் உள்ளிட்ட 119 பேரும் வாக்களித்தனர்.
இதன்படி இந்த பிரேரணையை பிரிதொரு நாளில் விவாதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.