நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவளிக்க 10 சுயாதீன அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
10 சுயாதீன கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றிரவு ஒன்றுகூடி இந்த முடிவை எடுத்துள்ளனர்.
வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் இந்த பத்து கட்சிகளை சேர்ந்த மூன்று கட்சிகளின் தலைவர்களாவர்.
எனினும் அவர்கள் அமைச்சு பொறுப்புகளை ஏற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.