பணம் அச்சிடப்படாவிட்டால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், பணம் அச்சிடுவது தனது கொள்கையல்ல என்றாலும், பணத்தை அச்சிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கூட நாட்டின் பொருளாதாரம் சரிந்ததாக நான் நினைக்கவில்லை. இந்த ஆண்டு மிகவும் நெருக்கடி அதிகரித்த வருடமாக உள்ளது.
நாட்டிற்கு அந்நிய செலாவணி இல்லை. அரசுக்கு வருமானம் இல்லை. அத்துடன், தற்போது சுமார் 3 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதை உடனடியாக பெறுவதுதான் நமக்கு இருக்கும் முதல் சவால்.
அதைத்தான் நான் இப்போது செய்ய முயற்சிக்கிறேன். அதற்காக நாம் பல தியாகங்களை செய்ய வேண்டி ஏற்படும்’ ‘ என்றார்.
#பிபிசி சிங்களம்