முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது.
இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
முன்னதாக சஜித் பிரேமதாஸவை ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு செய்திருந்தது.
தற்போது ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில் அவருக்கு ஆதரவு அளிக்கும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவு இன்று (13) எடுக்கப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.