இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அல்லது நாளை (13) பதவியேற்கவுள்ளார்.
புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற முடியும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நேற்றிரவு கலந்துரையாடப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரு பகுதியினர் மற்றும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் அவருக்கு ஆதரவை தெரிவித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.