இராணுவ ஆட்சிக்கு வழிவகுக்கும் வகையில் நாசகாரர்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
“நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அமைதியான போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதை நிறுத்த உங்கள் திறமையைப் பயன்படுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.