நடப்பு அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் அரசியல்வாதிகள் நடத்திய ஊழல் தொடர்பான கோப்புகளை ஜேவிபி வெளியிட்டது.
இதன்போது ஜேவிபியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
எவ்வித அனுமதியும் இன்றி அமெரிக்க CIA முகவரான இமாத் சுபெரி என்றழைக்கப்படும் நபருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு 6.5 மில்லியன் டொலர் வழங்கப்பபட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் எழுத்துமூல மற்றும் உத்தியோகபூர்வ அறிவுறுத்தலின் பேரில் மத்திய வங்கி இந்த கொடுப்பனவுகளை வழங்கியதாக அஜித் நிவார்ட் கப்ரால் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவில் பல்வேறு விளம்பரத் திட்டங்களுக்காக அப்போது அரசாங்கம் பணம் செலுத்தியதாக அவர் மேலும் கூறினார்.
உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கப்ரால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.