அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரமே ஜனாதிபதியின் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படடுள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கான கலந்துரையாடல் ஜனாதிபதியுடன் இன்று காலை நடைபெறவுள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தற்போது, சுயாதீனமாக செயற்படும் 11 கட்சிகளின் தலைவர்களுடன் மாத்திரம் ஜனாதிபதி கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது.