நாட்டில் உள்ள பிரச்சினைகளை மறைப்பதில் அர்த்தமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நேரடியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதற்கான தீர்வுகளை துரிதமாக வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ நேரடியாக முடிவெடுத்து மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
தலைவலி இருந்தால் அதற்கு உடல் வலிக்கு மருந்து கொடுத்து பயனில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.