Friday, September 20, 2024
31 C
Colombo
அரசியல்ஜனாதிபதிக்கும் விமலவீரவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு

ஜனாதிபதிக்கும் விமலவீரவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு

இடைக்கால அல்லது காபந்து அரசாங்கங்களை அமைப்பதற்கு தனக்கு விரும்பவில்லை என வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தானும் பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையினரும் மஹிந்த ராஜபக்ஸவின் படத்தைக் காட்டித்தான் நாடாளுமன்றுக்குள் வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இடைக்கால அரசாங்கத்தை உருவாக்குதல் மற்றும் அதன் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்காளிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Keep exploring...

Related Articles