பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளரான ஹிப்ஹொப் தமிழா ஆதியின் வீட்டிற்கு மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்ததையடுத்து, சந்தேக நபர்கள் தப்பியோட முயற்சித்துள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் கைதானதுடன், அவர்கள் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அத்துடன், யாருடைய வீடு என்று தெரியாமல் அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.