Friday, September 20, 2024
29 C
Colombo
அரசியல்ஜனாதிபதி - SLPP MP குழுவுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி – SLPP MP குழுவுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றக் குழுவை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று அழைத்துள்ளார்.

இதனை இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் பதவி விலகவேண்டுமென ஸ்ரீலங்கா பொது பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய வகையில், இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு வழிவகுத்து, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles