ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கீழ் அரசாங்கத்தை அமைக்க பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் கட்சிகள் தயாரில்லை எனவும், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் தாம் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன்.
இன்று நாட்டில் பாரிய மருந்து பொருள் தட்டுப்பாடு இருக்கிறது. எதிர்காலத்தில் அது மேலும் அதிகரிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.