Friday, September 20, 2024
28 C
Colombo
அரசியல்ராஜபக்ஷ குடும்பத்தினர் அவசர கலந்துரையாடல்

ராஜபக்ஷ குடும்பத்தினர் அவசர கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில், ராஜபக்ஷ குடும்பத்தினரின் முக்கிய கூட்டம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

கோட்டையில் உள்ள ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மஹிந்த, பசில், சமல் உள்ளிட்ட பல ராஜபக்ஷக்கள் கலந்து கொண்டனர்.

நாட்டின் அரசியல் நெருக்கடி தொடர்பாக முக்கியமாக இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

மஹிந்தவை பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

அவ்வாறு தான் பதவி விலகினால் எதிர்க்கட்சியில் அமருவதாக பிரதமர் பதிலளித்துள்ளார்.

எவ்வாறாயினும், கலந்துரையாடலில் குறுக்கிட்ட பசில் ராஜபக்ஷ இது தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடி இன்று தீர்மானத்தை அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

Keep exploring...

Related Articles