நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உத்தேச 21 ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனையை சபாநாயகரிடம் கையளித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன நாடாளுமன்ற குழுவினர் இந்த 21 ஆவது திருத்தத்திற்கான யோசனையை கையளித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியினால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் யோசனை, சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சபையில் நேற்று தெரிவித்தார்.