Friday, September 20, 2024
28 C
Colombo
அரசியல்பிரதமரை நீக்கக்கோரி ஆளும் தரப்பிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

பிரதமரை நீக்கக்கோரி ஆளும் தரப்பிடமிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

ஆளும் தரப்பின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி உள்ளனர்.

அதில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி அவருக்கு பதிலாக புதிய பிரதமர் ஒருவர் தலைமையில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை உருவாக்குமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க தவறினால் மனசாட்சியின்அடிப்படையில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் எனவும் அந்த கடிதத்தில் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த கடிதத்தில் வசந்த யாப்பா பண்டார, உதேனி கிரிடிகொட, குமாரசிறிரத்நாயக்க, கேபிஎஸ் குமாரசிறி, ராஜிக விக்கிரமசிங்க, அகில எல்லாவல, லலித்எல்லாவல, அஜித் ராஜபக்ஷ, உபுல் கலப்பத்தி, சுதத் மஞ்சுள போன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles