Tuesday, May 6, 2025
24 C
Colombo
அரசியல்உணவு நெருக்கடிக்கு 5 நாடுகளிடம் தீர்வு கோரிய ரணில்

உணவு நெருக்கடிக்கு 5 நாடுகளிடம் தீர்வு கோரிய ரணில்

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கை எதிர்நோக்கும் பாரிய உணவு நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் இணக்கப்பாட்டுக்கு வந்தால் இலங்கைக்கு உதவுவது இலகுவாக இருக்கும் என ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்துள்ளனர்.

எதிர்காலத்தில் இலங்கை இதைவிட மோசமான உணவு நெருக்கடியை சந்திக்க நேரிடும் என இந்த நாடுகள் முன்னாள் பிரதமரிடம் தெரிவித்துள்ளதாகவும், அந்த வகையில் இலங்கைக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் மேற்கண்ட நாடுகள் அவரிடம் தெரிவித்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles