Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉக்ரைன் - போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணிகள் ஆரம்பம்

உக்ரைன் – போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணிகள் ஆரம்பம்

March 2, 2022 – 6:00am

வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை

உக்ரைனில் நிலவுகின்ற முன்னேற்றங்கள் குறித்து வெளிநாட்டமைச்சு உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. இந்த நோக்கத்துக்காக, உக்ரைனிலுள்ள இரண்டு (02) மாணவர்கள் உட்பட அண்ணளவாக நாற்பது (40) இலங்கைப் பிரஜைகளை உக்ரைன் – போலந்து எல்லை வழியாக வெளியேற்றும் பணியில் அமைச்சு தற்போது ஈடுபட்டுள்ளது.

இந்த செயன்முறைக்கு வோர்சோ மற்றும் அங்காராவிலுள்ள இலங்கைத் தூதரகத்தால் வசதியளிக்கப்பட்டு வருவதுடன், அங்காராவிலுள்ள தூதரகம் உக்ரைனுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது.

வெளியேற்றும் செயன்முறையை திறம்பட எளிதாக்குவதை உறுதி செய்வதற்காக, வோர்சோவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வளங்களை வழங்கும் பணியை அமைச்சு பலப்படுத்தியுள்ளது. உக்ரைனை விட்டு வெளியேறும் இலங்கைப் பிரஜைகளுடன் அங்காரா மற்றும் வோர்சோவில் உள்ள இலங்கைத் தூதுவர்கள் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருவதுடன், அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும் இலங்கைக்கு மீள நாடு திரும்புவதற்கும் வழிவகை செய்கின்றனர்.

உகரைனுடன் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளில் உள்ள இலங்கைப் பிரஜைகளின் நிலைமையைக் கண்காணிப்பதிலும் வெளிநாட்டமைச்சு ஈடுபட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் உள்ள சம்பந்தப்பட்ட கௌரவத் தூதுவர்கள் மற்றும் இலங்கைப் பிரஜைகளுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றனர்.

பெலாரஸிலுள்ள எட்டு (08) பல்கலைக்கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் 1,556 மாணவர்கள் உட்பட, ஏறத்தாழ 1,600 இலங்கைப் பிரஜைகளுடன் மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றது. இலங்கை மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகள், மாணவர் மற்றும் பெற்றோர் குழுக்கள் மற்றும் பெலாரஸில் உள்ள ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் மொஸ்கோவிலுள்ள இலங்கைத் தூதுவர் நேரடித் தொடர்பில் ஈடுபட்டுள்ளார். அவசியமான சந்தப்பங்களில், வழக்கமான நிலைதொடர்பில் புதிய தகவல்கள் பெற்றோருக்கு வழங்கப்படுகின்றன.

சம்பந்தப்பட்ட இலங்கைத் தூதரகங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிக் கொள்ளுமாறு பிராந்தியத்திலுள்ள இலங்கைப் பிரஜைகளை அமைச்சு கேட்டுள்ளது.

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles