Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச் 02 : இரு கட்டங்களில் 7 ½ மணி நேர மின்வெட்டு

மார்ச் 02 : இரு கட்டங்களில் 7 ½ மணி நேர மின்வெட்டு

March 1, 2022 – 6:14pm

நாளையதினம் (02) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதற்கமைய நாட்டை 10 வலயங்களாக (E,F, | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 7 மணித்தியாலங்கள 30 நிமிடங்கள் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 
– மு.ப. 8.00 – பி.ப. 1.00 மணி வரை 
– பி.ப. 1.00 – பி.ப. 6.00 மணி வரை 
முதல் கட்டத்தில் 5 மணித்தியாலங்களும்

– பி.ப. 6.00 – பி.ப. 8.30 மணி வரை 
– பி.ப. 8.30 – பி.ப. 11.00 மணி வரை 
இரண்டாம் கட்டத்தில் 2.30 மணித்தியாலங்களும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

PDF File: 
http://www.thinakaran.lk/sites/default/files/news/2022/03/01/E-02-03-2022-Power-Interruption-Schedule.pdf
Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles