Friday, September 20, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க வேண்டும்

அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க வேண்டும்

March 1, 2022 – 9:24am

அங்கஜன் ராமநாதன் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி 

மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் வௌியிட்டுள்ள மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்துக்கள் அனுஷ்டிக்கும் மகத்தான நன்நாளான மகா சிவராத்திரி தினத்தன்று உலகில் சமாதானம் மலர்ந்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டுகிறேன்.  

அறிந்தோ- அறியாமலோ செய்த பாவங்களுக்கு விமோசனம் பெற ஈசனுக்கே உரித்தான மகா சிவராத்திரி விரதத்தை இந்துமக்கள் அனுஷ்டித்தால் வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ்வான வாழ்வு வாழலாம் என்பது புராணங்கள் ஊடாக நாம் அறிந்த உண்மை.  

“நமசிவாய” எனும் ஈசனின் மந்திரம் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி மனிதனை நல்வழிப்படுத்த வல்லது. இந்த நாளில் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொருவரும் பிறவிப்பயனை அடைய வேண்டும்.  

இந்த உலகில் பிறந்த அனைவருமே பிறப்பால் சமமானவர்கள். சாதி, மத, இன, நிற வெறுபாடுகள் எமக்குள் நாமே வகுத்தவை. இறைவன் அந்த பாகுபாட்டை ஒருபோதும் வகுக்கவில்லை. மதத்தாலோ- இனத்தாலோ உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. மத விழுமியங்களைப் பின்பற்றி உள்ளத்தால் உயர்ந்தவர்களே உண்மையான மனிதர்கள். அவர்களையே இந்த உலகம் போற்றும்.   சிவனுக்குரிய சிறப்பான நாளான மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறேன்.    

Send Push Notification: 



<!——>








Keep exploring...

Related Articles