Monday, March 31, 2025
30 C
Colombo
அரசியல்மஹிந்த மற்றும் ரணிலின் வாகனங்களை மீள கையளிக்குமாறு உத்தரவு

மஹிந்த மற்றும் ரணிலின் வாகனங்களை மீள கையளிக்குமாறு உத்தரவு

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்தும் மேலதிக அரச வாகனங்களை மீள கையளிக்குமாறு ஜனாதிபதி செயலகம் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த வாகனங்களை மீளக் கையளிக்குமாறு அவர்களுக்குப் பல சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த அறிவித்தலானது ஜனாதிபதி செயலகத்திலிருந்து கடிதம் மூலம் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ தங்காலையில் உள்ள வீட்டில் தங்கி இருப்பதால் அவர் கொழும்பு வந்த பின்னர் இந்த வாகனங்கள் கையளிக்கப்படவுள்ளதாக, மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கைது

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இன்று (20) பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுத் தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரீன்...

Keep exploring...

Related Articles