Friday, June 20, 2025
30 C
Colombo
வடக்குபனை மரத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து மரணம்

பனை மரத்தில் ஏறியவர் தவறி வீழ்ந்து மரணம்

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் கைதடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்டிக்கொடுக்க பனை மரத்தில் ஏறிய போது தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் கைதடி பகுதியைச் சேர்ந்த 41 வயதான செல்வராசா கேதீஸ்வரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உடல் கூற்று சோதனைக்கு பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles