‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உட்பட பலர் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் இரண்டு பாகங்களாக, லைகா நிறுவனம் தயாரிப்பில் மாபெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.